பிரதமர் ஷின்சோ அபே தேர்தலை நடத்த தீர்மானம்

51435 0

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே (ளூiணெழ யுடிந) தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான ஆட்சிக காலம் மேலும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கு ஏற்ற வகையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.

ஜப்பான் எதிர்நோக்கும் பல தேசிய பிரச்சனைகளை கையாள்வதற்கு வலுவான அரசாங்கம் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அதற்கு ஏற்றவகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக வட கொரியா ஜப்பானுக்கு எதிராக செயல்படும் தன்மையினை புதிய அரசாங்கம் அமைப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் ஒக்டோபர் 22ஆம் திகதி இடம்பெறும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.